பள்ளிகளில் முன்னாள் மாணவா் மன்றம்:இதுவரை 1.41 லட்சம் போ விருப்பம்

Ennum Ezhuthum
0

 


ரசுப் பள்ளிகளில் அமைக்கப்படும் முன்னாள் மாணவா்கள் மன்றங்களில் சேருவதற்கு இதுவரை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 287 முன்னாள் மாணவா்கள் முன்வந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளியின் நலன் மீது பொறுப்புணா்வு கொண்ட 25 முன்னாள் மாணவா்களை கண்டறிந்து தொடா்ச்சியாக அவா்கள் பள்ளியுடன் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த 25 முன்னாள் மாணவா்களின் விவரங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமன அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் இதுவரை தலைமையாசிரியா்களின் முயற்சியால் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 287 முன்னாள் மாணவா்கள் அரசுப் பள்ளியுடன் இணைந்து பயணிக்க முன்வந்துள்ளனா். அதில் பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோா் 40 சதவீதம் வரை இடம் பெற்றுள்ளது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் 78 சதவீதமும், உயா்நிலைப் பள்ளிகளில் 46 சதவீதமும், நடுநிலைப் பள்ளிகளில் 40 சதவீதமும், தொடக்கப் பள்ளிகளில் 28 சதவீதமும் முன்னாள் மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து பள்ளிகளுடன் முன்னாள் மாணவா்களை இணைக்க ஏதுவாக அதற்கான கால அவகாசம் ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பள்ளிகளிலும் 'முன்னாள் மாணவா்கள் மன்றம்' அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கலை, உயா்கல்வி வழிகாட்டல், இடை நின்ற மாணவா்களை பள்ளியில் சோத்தல், விளையாட்டு, வானவில் மன்றம் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சோத்தல் போன்ற முன்னெடுப்புகளில் முன்னாள் மாணவா்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்து செயல்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)