2024ம் ஆண்டு கேட் தேர்வுக்கு வரும் 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: ஐ.ஐ.எஸ்சி அறிவிப்பு

Ennum Ezhuthum
0


 இன்ஜினியரிங் முடித்த மாணவர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான கேட் தேர்வுக்கு வரும் 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஐ.ஐ.எஸ்சி தெரிவித்துள்ளது.

இன்ஜினியரிங் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ-மாணவிகளுக்காக தேசிய அளவில் இன்ஜினியரிங் பட்டதாரி திறன் தேர்வு என்று அழைக்கப்படும் (கேட்) தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்(ஐ.ஐ.எஸ்சி) வெளியிட்டு உள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வருகிற 30ம் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 29ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 3, 4, 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கணினி வாயிலாக ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை ஐ.ஐ.எஸ்சி., 7 ஐ.ஐ.டி.க்களுடன் இணைந்து நடத்த இருக்கிறது.

தேர்வு முடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண் அட்டைகள் அதே மாதம் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தேர்வை நடத்தும் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்(ஐ.ஐ.எஸ்சி) அறிவித்துள்ளது. இந்த நிலையில் கேட் தேர்வு நடைபெறும் நாட்களில், வேறு எந்த தேர்வுகளும் நடைபெறாதபடி கல்வியாண்டு நாட்காட்டியில் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தெரிவித்திருக்கிறது

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)