தமிழகம் முழுவதும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

Ennum Ezhuthum
0 minute read
0
ads banner
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!

 

 பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை 
இன்று  
 தொடங்கி வைக்கிறார்.
டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் செல்கிறார்.

இன்றிரவு நாகையில் உள்ள விடுதியில் தங்கும் அவர், நாளை திருக்குவளை அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.

வரும் 26ஆம் தேதி, முதலமைச்சரின் கள ஆய்வு திட்டத்தின் கீழ், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் 27-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பவுள்ளார்.

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 29, March 2025