டிட்டோ-ஜாக் சார்பில் 11.9.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Ennum Ezhuthum
0

 


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

           💥டிட்டோ-ஜாக் சார்பில் 11.9.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்:

       💥டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை  5.30 மணி அளவில் இணைய வழியில் நடைபெற்றது.அனைத்து உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

     💥11.9.2023 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும்  மாவட்டத்தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

💥பிரதானமான கோரிக்கைகள்:

♦(1) எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.புதன்,வெள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போன்ற பணியை முற்றிலும் நீக்கவேண்டும்.

♦(2)B.Ed படிக்கும் பயிற்சி  மாணவர்களை கொண்டு  பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய உட்படுத்தக்கூடாது.

♦(3) EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.

♦(4) ஆசிரியர்களை(RP) கருத்தாளர்களாக நியமிக்கக்  கூடாது.

♦(5) விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கக்கூடாது.

      💥மாபெரும் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்று கோரிக்கைகளை வென்றெடுத்து தன்மானம்,சுயமரியாதையை மீட்டெடுக்க ஆர்ப்பாட்டக்களம் நோக்கி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள தயாராவோம்!

       💥ஆர்ப்பாட்ட களம் நோக்கி ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!.

           சு.குணசேகரன்

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Post a Comment

0Comments

Post a Comment (0)