அரசு
பணியாளர் தேர்வுக்கான நேர்முக தேர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என
டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்து உள்ளதுஇது குறித்து டி.என்.பி.எஸ்.சி.,
வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
அரசு பணியாளர்களை
தேர்வு செய்யும் பணிகள் தொடர்பான நடைமுறைகள் வெளிப்படை மற்றும்
நம்பகத்தன்மையை மேம்படுத்தும் விதமாக புதிய நடைமுறை பின்பற்ற உள்ளது.
இதன்படி நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதார்களின் பெயர் ,
படம் பிறந்த தேதி உள்ளிட்ட ஆடையாளங்கள் மறைக்கப்படும். அதற்கு பதிலாக
விண்ணப்பதாரர்களை ஏ.பி.சி.டி., முதலிய எழுத்துக்களை கொண்டு குறியீடு செய்து
நேர் காணலுக்கு அனுமதிக்கப்படுவர். புதிய நடைமுறையுடன் ஏற்கனவே இருந்த
ரேண்டம் சப்ளிங் முறையையும் பின்பற்ற உள்ளது. இதன்மூலம் விண்ணப்பதாரர்களின்
மீதான சார்புத்தன்மை ஏற்படும் வாய்ப்புக்கள் நீக்கப்படுவதுடன்
வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும் என அவை தெரிவித்து உள்ளது.