கறிவேப்பிலை பொடி தெரியும்.. அதென்ன கறிவேப்பிலை குழம்பு - இதோ ரெசிபி!

Ennum Ezhuthum
0

 

கறிவேப்பிலை பொடி தெரியும்.. அதென்ன கறிவேப்பிலை குழம்பு - இதோ ரெசிபி!
றிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். இது, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
அந்தவகையில், கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல அடங்கிய கறிவேப்பிலை கொண்டு சுவையான மசாலா குழம்பு ஒன்றை செய்வது எப்படி என இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை - 1 கட்டு.
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்.
மிளகு - 10.
காய்ந்த மிளகாய் - 2.
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்.
துவரம் பருப்பு - ஒரு ஸ்பூன்.
கடுகு - 1/2 ஸ்பூன்.
சீரகம் - ஒரு ஸ்பூன்.
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு.
நல்லெண்ணெய் - 100 மில்லி.
உப்பு - 1 ஸ்பூன்.
கொத்தமல்லி தழை - 1 கொத்து.

செய்முறை :

முதலில், கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர், இதில் உறுவி வைத்துள்ள கறிவேப்பிலை தழைகளை சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.



தற்போது, அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

பின்னர் இந்த சேர்மத்தை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றிக்கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து பொடியாக அரைத்து, தண்ணீர் சேர்த்து மசாலா கரைசல் தயார் செய்யவும்.

இதனிடையே ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியினை ஒரு கோப்பையில் தண்ணீருடன் சேர்த்து ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.




தற்போது கறிவேப்பிலை குழம்பு தயார் செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் இதனுடன் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலா கரைசல் மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். முதல் கொதி வந்துதும் இதில் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கிவிட, கறிவேப்பிலை மசாலா குழம்பு ரெடி!

Post a Comment

0Comments

Post a Comment (0)