வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

Ennum Ezhuthum
0


 தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை கண்காணிக்க 34 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையில் 2019-2020 மற்றும் 2021-2022ம் ஆண்டுகளில் ஏற்பட்ட 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம், செப்டம்பர் 10ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்துகிறது. இந்த தேர்வில் பங்கேற்க 42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்காக 131 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த 34 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி- செங்கல்பட்டு, பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி-திருவள்ளூர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷாராணி-சென்னை, சமக்ர சிக்‌ஷா கூடுதல் இயக்குநர் உமா-காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 30 மாவட்டங்களுக்கான அதிகாரிகள் பட்டியல் அந்தந்த அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)